close
Choose your channels

'பிகில்' திரைப்பட வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி  உத்தரவு

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உதவி இயக்குனர் செல்வா என்பவர் 'பிகில்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து, இந்த படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட் இதுகுறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு படக்குழுவினர்களுக்கு நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட். நாளைய விசாரணயில் தான் இந்த படம் தீபாவளி அன்று வெளிவருமா? என்பது தெரிய வரும். இந்த வழக்கின் முடிவுக்கு பின்னரே ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.