close
Choose your channels

இரும்புத்திரை' தடை வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Wednesday, May 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் மத்திய அரசின் ஆதார் திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், இந்த காட்சிகள் நீக்கும் வரை இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும்  நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும், ஆதார் திட்டம் குறித்தும் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால் சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி அவருடைய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் வரும் வெள்ளியன்று இந்த படம் வெளியாவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.