close
Choose your channels

தேவதாசி விவகாரம்: தாயாருக்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பாடகி சின்மயியின் தாயார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தேவதாசி முறையை தான் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். தேவதாசி முறை என்பது இந்தியாவிற்கே சொந்தமானது என்றும் அது மிகச்சிறந்த சிஸ்டம் என்றும் அதை பெரியார்தான் சிதைத்தார் என்றும் அதனால் அவரை நான் மன்னிக்க மாட்டேன்’ என்றும் கூறியிருந்தார்

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பாடகி சின்மயி தேவதாசியாக ஆகவேண்டும் என சில நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார் அவர் கூறியதாவது: தேவதாசி முறையை நான் முழுவதுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
எங்க அம்மாவுடைய கருத்துக:ஆ; என்ன தேவதாசி ஆக சொல்வது எந்த நியாயமும் இல்லை. அவங்க கருத்துக்கு அவங்க தான் பொறுப்பு. இருப்பினும் நான் அவங்களுக்காக மன்னிப்பு கேட்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

தேவதாசி முறையை ஒழிக்க அனைத்து மாதர் அமைப்புகளும் குரல் கொடுத்த நிலையில் சின்மயியின் தாயார் அதற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.