close
Choose your channels

மகள் நினைவாக பாடகி சித்ரா செய்த பெரும் உதவி

Monday, December 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தினி கடந்த 2011ஆம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் விழுந்து மரணம் அடைந்தார். அவருடைய நினைவால் பாடகி சித்ரா பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மகளின் நினைவாக தற்போது கேரளாவில் உள்ள பருமுலா என்ற பகுதியில் உள்ள ஒரு கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார். இந்த பிரிவின் தொடக்க விழா நேற்று நடந்தபோது அதில் கலந்து கொண்ட பாடகி சித்ரா, தனது மகள் குறித்து பேசும்போது கண்ணீர்விட்டார்

முன்னதாக இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாடகி சித்ரா, தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.