close
Choose your channels

'டான்' கதையை முதலில் விஜய்க்கு கூறினாரா இயக்குனர் சிபி சக்கரவர்த்தி?

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதையை முதலில் விஜய்யிடம் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை அட்லி இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிசக்கரவர்த்தி தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டான்’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனன், சிங்கம்புலி, மனோபாலா, சமுத்திரகனி ஆகிய ஐந்து இயக்குனர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர் மூலம் புகழ்பெற்ற ஷிவாங்கி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதையை ’மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பின்போதே விஜய்யிடம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி கூறியதாகவும் இந்த கதை மிகவும் சூப்பராக இருப்பதாக விஜய் பாராட்டியதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடி வசூலை பெற்ற நிலையில் விஜய்யே பாராட்டிய ‘டான்’ திரைப்படமும் 100 கோடி வசூலை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.