close
Choose your channels

சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது கல்லூரி மாணவரா? திடுக் தகவல்

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சனம்ஷெட்டிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் சமூக வலைதளங்களில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது.

இது குறித்து நடிகை சனம்ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சியை சேர்ந்தவர் என்ற கல்லூரி மாணவர் ராய் என்பவர் தான் சனம்ஷெட்டிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் இதனையடுத்து அவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சனம்ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவர் ஒரு கல்லூரி மாணவர் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.