close
Choose your channels

ஓடிடியில் வெளியாகும் சூப்பர்ஹிட் படத்தின் மூன்றாம் பாகம்!

Monday, April 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்றின் மூன்றாம் பாகம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பீட்சா’ என்ற திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவ்ந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அதன் பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2013அம் ஆண்டு வெளியானது.

இந்த நிலையில் ’பீட்சா’ படத்தின் மூன்றாம் பாகம் சமீபத்தில் உருவாகியது என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் என்பவர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் முக்கிய வேடத்தில் நடித்து வந்த இந்த படத்தில் பவித்ரா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளை மூட உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த ’பீட்சா 3’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்போவதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் ’பீட்சா 2’ படத்தின் அடுத்த பாகம் இல்லை என்றும் டைட்டில் மட்டுமே ’பீட்சா 3’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் காளி வெங்கட், இயக்குனர் கௌரவ் நாராயணன் உள்பட பலர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.