close
Choose your channels

சர்ச்சைக்குரிய ட்வீட் பதிவு செய்தவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல நடிகை..!

Sunday, April 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்தவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஊர்வசி ரெளட்டாலா. இவர் தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலா இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 65 மில்லியன் ஃபாலோயர்கள் பாலோ செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமூக வலைதள பிரபலம் ஒருவர் ஊர்வசி ரெளட்டாலா குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ’ஏஜென்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்த போது ஊர்வசியை ஹீரோ அகில் அகினேனி என்பவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள ஊர்வசி, ‘உங்களது பொய்யான ட்விட் குறித்து எனது வழக்கறிஞர் குழுவால் அவதூறு வழக்கு தொடர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, உங்கள் தகவல் உண்மையானது அல்ல. நீங்கள் ஒரு முதிர்ச்சி அடையாத நபர், உங்களால் எனது குடும்பத்திற்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.