நாங்கள் தான் தனுஷின் அப்பா-அம்மா என கூறிய வழக்கு: மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


தனுஷின் அப்பா அம்மா நாங்கள்தான் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் கதிரேசன் மற்றும் அவரது மனைவி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் என்ற பகுதியை சேர்ந்த கதிரேசன் மற்றும் அவரது மனைவி ’தனுஷ் எங்கள் மகன் என்றும் அவர் எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு தாக்கல் செய்த நிலையில் மேலூர் நீதிமன்ற வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை அடுத்து போலி ஆவணங்கள் தாக்கல் செய்து உயர்நீதிமன்றத்தில் தனுஷ் தனக்கு சாதகமாக உத்தரவை பெற்றுவிட்டார் என்று மீண்டும் மதுரை ஹைகோர்ட்டில் கதிரேசன் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் தவறான உள்நோக்கத்தில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தகுந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இது ஒரு அற்பத்தனமான வழக்கு என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments