close
Choose your channels

'வடசென்னை'யை அடுத்து முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்

Tuesday, June 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல் பாக படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் அவர் நடித்து வந்த ஹாலிவுட் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடித்து வந்த மற்றொரு படமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இதுகுறித்து இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். தனுஷூடன் நான் நடித்து வந்த 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. சக நடிகர்களை சமமாக எப்படி நடத்த வேண்டும் என்பது உள்பட பல விஷயங்களை நான் தனுஷிடம் இருந்து கற்று கொண்டேன். அதேபோல் இயக்குனர் பாலாஜிமோகனும் கூலாக அனைவரிடமும் வேலை வாங்கினார் என்று கூறியுள்ளார்.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.