close
Choose your channels

சாரா அலிகானிடம் லட்சம் முறை சொல்லியும் கேட்க மாட்டேங்குறாங்க: தனுஷ்

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சாரா அலிகானிடம் லட்சம் முறை சொல்லியும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார் என திரைப்பட புரமோஷன் விழாவில் தனுஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படம் ’அட்ராங்கி ரே’. அக்ஷய்குமார், தனுஷ், சாரா அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 24ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பதும், இந்த படம் தமிழில் ’கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் ரிலீசாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்த போது அதில் ’என்னை சாரா அலிகான் படப்பிடிப்பின்போது தலைவா என்று கூறினார். தலைவா என்று என்னை அழைக்க வேண்டாம், அதை ரஜினி ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். தலைவா என்றால் அது ரஜினி ஒருவர்தான் என்று அவரிடம் நான் லட்சம் முறை சொல்லி விட்டேன். ஆனால் அவர் கேட்க மாட்டேங்கிறார் என்று கூறினார்.

மேலும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இளையராஜாவின் இசை என்றும், இளையராஜா என்னுடைய கடவுள் என்றும், அவரை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும், அவர்தான் எனக்கு அம்மா, தாலாட்டு எல்லாமே என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், அந்த படத்திற்கு எத்தனை விருது கிடைத்தாலும் அவை அனைத்துமே இயக்குனருக்குத்தான் உரிமை என்றும் அதனால் நான் ஒரு இயக்குனராக விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos