close
Choose your channels

மனைவி ரக்சிதாவுடன் ஏற்பட்ட பிரிவு.. தினேஷ் கூறிய உருக்கமான சம்பவம்..!

Wednesday, November 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தங்களுக்கு வாழ்க்கையில் நடந்த பூகம்பமான சம்பவங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்ட நிலையில் அடுத்ததாக தினேஷ் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை, அதனால் ஏற்பட்ட பிரிவு குறித்து இந்த டாஸ்க்கில் தெரிவித்துள்ளார்.

’என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. நானும் என் மனைவியும் ஒரு சின்ன சண்டை போட்டுக் கொண்டதால் அதன் பின் இருவருக்கும் ஏற்பட்ட ஈகோ காரணமாக அந்த சண்டை பெரிதாக மாறிவிட்டது. அதை பெரியவர்கள் எவ்வளவோ தீர்த்து வைக்க முயற்சித்தும் தீர்த்து வைக்க முடியாததால் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.

கடந்த ஒரு ஆண்டுகளாக நாங்கள் இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். அதிலிருந்து மீண்டு வர முடியாமல் நான் இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறேன். என்னை நானே அந்த பிரிவு காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டே. அவரும் அப்படித்தான் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பார். இதையெல்லாம் கடந்து தான் நாங்கள் இருவருமே வந்திருக்கிறோம்.

மீண்டும் சேர பலமுறை முயற்சி செய்தும் அதில் பலன் கிடைக்கவில்லை. தற்போது எனது வேலைகளை பார்த்துக்கொண்டு வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படி போய்க் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றாலும் கடவுள் அருளால் விரைவில் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.