close
Choose your channels

ஸ்டெர்லைட் நகரத்திற்கு செல்லும் 'உறியடி 2' இயக்குனர்

Saturday, April 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜயகுமார் இயக்கி நடித்த 'உறியடி 2' திரைப்படம் நேற்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்கள் விழிப்புணர்ச்சி பெறும் வகையில் இந்த படம் வெளிவந்துள்ளதாக பெரும்பாலான ஊடகங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து இயக்குனர் விஜயகுமார் ரசிகர்களை திரையரங்குகளில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக நாளை தூத்துகுடியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படம் தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டத்தை பல காட்சிகளில் நினைவுபடுத்துவதால் விஜயகுமார் தூத்துகுடிக்கு சென்று படம் பார்ப்பது ஒரு பொருத்தமான ஒற்றுமையாக கருதப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.