close
Choose your channels

கருணாஸ் கார் கண்ணாடியை நொறுக்கிய மர்ம நபர்கள்: நெல்லையில் பரபரப்பு

Saturday, September 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸின் கார் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் நெற்கட்டும்செவல் என்ற கிராமத்தில் நடைபெறும். இந்த விழாவிற்கு அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் இந்த வருடம் பூலித்தேவனின் 302வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் கருணாஸ், பூலித்தேவனின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக நெற்கட்டும்சேவலுக்கு சென்றிருந்தார். அங்கு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்னை திரும்பிய போது அவரது காரை அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென சூழ்ந்து கொண்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதனை அறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக லேசான தடியடி நடத்தி அங்கிருந்த கூட்டத்தை கலைத்து, கருணாஸை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.