close
Choose your channels

விஜய்-அமலாபால் இணைந்து எடுத்த முக்கிய முடிவு

Saturday, August 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஆகிய இருவரும் விவகாரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து இயக்குனர் விஜய் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் தனக்கும் அமலாபாலுக்கு இடையே நேர்மையும் நம்பிக்கையும் இல்லாததே பிரிவுக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இருவரும் இணைந்து சட்டப்படி பிரிவதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகை அமலா பால் சார்பில் அவரது வழக்கறிஞர் சாய் ஜோஸ் கிடங்கூர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் - அமலா இருவரும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.