close
Choose your channels

'சதுரங்க வேட்டை' பாணியில் ரூ.42 கோடி மோசடி செய்த சென்னை ஓட்டல் முதலாளி!

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஒருத்தனை ஏமாத்தனும்ன்னா அவனது ஆசையை தூண்டவேண்டும்' என்ற கதைதான் 'சதுரங்க வேட்டை' திரைப்படம். இந்த திரைப்படத்தின் பாணியில் சென்னையில் ஒரு பெரும் மோசடி நடந்துள்ளது

சென்னை வடபழனியில் இயங்கி வந்த பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளர் முகமது காசிம் என்பவர் தங்கள் உணவகம் சமைத்துக் கொடுக்கும் உணவு பதார்த்தங்களை கிளைகள் அமைத்து விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றை செய்தார்

இவரது விளம்பரத்தை நம்பி பலர் இந்த உணவகத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆரம்பத்தில் ஒருசில கிளை உரிமையாளர்களுக்கு 30% வரை லாபம் கிடைத்துள்ளதால் மேலும் பலர் முதலீடு செய்தனர். இந்த நிலையில் சுமார் ரூ.42 கோடி வரை முதலீடு பெற்ற முகமது காசிம் திடீரென தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் காவல்துறையினர்களிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான முகமது காசிமை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.