close
Choose your channels

'இந்தியன் 2' விபத்து: இன்று கமல் ஆஜர்

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தால் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்ற அதிர்ச்சி செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் இருந்த கமலஹாசன், ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட சிலரை விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் 'இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து குறித்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று கமலஹாசன் ஆஜராகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் கமல்ஹாசன் ஆஜராக வேண்டுமென அனுப்பப்பட்ட சம்மனை அடுத்து இன்று அவர் ஆஜராக உள்ளார் என்பதும் அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனை அடுத்து ஷங்கர் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் விரைவில் போலீசார் முன் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.