close
Choose your channels

'குக் வித் கோமாளி': அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4வது போட்டியாளர் இவரா?

Saturday, March 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’களும் கோமாளிகளும் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த வாரம் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும் போட்டி நடந்த நிலையில் அதில் கனி, பாபா பாஸ்கர் மற்றும் அஸ்வின் ஆகிய மூவரும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஷகிலா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டி நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே எலிமினேட் ஆன மதுரை முத்து, தீபா, தர்ஷா, ரித்திகா, பவித்ரா, ஷகிலா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் இன்று ஒளிபரப்பாகி உள்ள நிலையில் பவித்ராவுக்கு புகழ், தர்ஷாவுக்கு சுனிதா, ஷகிலாவுக்கு தங்கதுரை, தீபாவுக்கு ஷிவாங்கி, மதுரை முத்துவுக்கு பாலா, ரித்திகாவுக்கு சரத் ஆகியோர் கோமாளிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் வெற்றி பெற்று அட்வண்டேஜ்ஜை ஷகிலா பெற்றுள்ளதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.

இந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் மெயின் டாஸ்க்கில் ஷகிலா வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் நாளைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.