close
Choose your channels

வன்முறை என்னைக்குமே இன்னொரு வன்முறையை தான் கொடுக்கும்: 'உடன்பிறப்பே' டிரைலர்!

Monday, October 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா நடித்த 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமுத்திரக்கனி, ஜோதிகா, சசிகுமார் நடித்த இந்தப்படத்தை இரா சரவணன் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாசமலர், கிழக்குச்சீமையிலே படத்திற்கு பிறகு வரும் நெகிழ்ச்சியான அண்ணன் தங்கை கதை என்றும் ஜோதிகாவின் சகோதரர் சசிகுமார் செய்யும் வீரமான ஒரு சில நடவடிக்கைகளால் அவரது குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக வன்முறை என்றைக்குமே தீர்வை கொடுக்காது, அது இன்னொரு முறை வன்முறையைதான் கொடுக்கும், இது புரியாமல் நீங்கள் செய்யும் பாவத்தை எல்லாம் என் பிள்ளைகள் மேலே இறக்குறீங்களே என்ற சமுத்திரகனியின் வசனம் இந்த படத்தின் கதையின் ஒன்லைனாக பார்க்கப்படுகிறது.

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் அதே போன்ற ஒரு மாபெரும் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.