close
Choose your channels

ஜூலியை பேசவிடாமல் கத்தி வெளியேற்றிய ஓவியா ரசிகர்கள்

Saturday, October 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிக நபர்களால் விரும்பப்படும் நபர் என்ற பெயர், புகழை பெற்றவர் ஓவியா. அவர் இந்த போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் வெற்றி பெற்ற ஆரவ்வை விட அதிக ரசிகர்களை பெற்று மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிக நபர்களால் வெறுக்கப்பட்டவர் ஜூலி. இவர் ஓவியாவுக்கு மட்டுமின்றி யாருக்குமே உண்மையாக இல்லாமல் போலித்தனத்தின் மொத்த உருவமாக இருந்ததால் பெரும்பாலானோர் அவரை வெறுத்தனர்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனம் ஆடிய ஜூலி, ஓரிரு வார்த்தைகள் பேசும்படி அழைக்கப்பட்டார். ஆனால் ஜூலி பேச ஆரம்பித்தவுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஓவியா ரசிகர்கள், 'ஓவியா ஓவியா என்று தொடர்ந்து கத்தி கொண்டே இருந்ததால் அவரால் பேச முடியவில்லை. 

ஒரு கட்டத்தில் அமைதியாக இருங்கள் என்று ஜூலியும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் கூறியும் தொடர்ந்து ஓவியா ரசிகர்கள் கத்தி கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி ஓவியாவை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓரிரு வார்த்தைகள் கூட பேச முடியாமல் பெரும் ஏமாற்றத்துடன் ஜூலி வெளியேறினார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.