close
Choose your channels

ஜோதிகா படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு

Monday, April 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்றாலும் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னரே இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வான் தூரல்கள்’ என்ற சின்மயி பாடிய பாடல் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. உமாதேவியின் அசத்தலான வரிகள் இந்த பாடல் ஹிட்டாக முக்கிய காரணம். குறிப்பாக இந்த பாடலில் உள்ள

வான் தூரல்கள் வாழ்த்துக்கள் பாட
நான் மீண்டுமே பூக்கிறேன்
நீதானடி இனி நீதானடி தந்தையே வாழ்நாட்களை
தாய் நானடி தந்தை நானடி

என்ற வரிகள் யாராலும் மறக்க முடியாதது

இந்த நிலையில் ‘வான் தூரல்’ பாடலை அடுத்து இன்று மாலை 4 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான ‘கலைகிறதே கனவே’ என்ற பாடல் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் பாடியுள்ள இந்த பாடலும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோதிகா, தியாகராஜன், பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப்போத்தன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேஜே பிரட்ரிக் இயக்கியுள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.