close
Choose your channels

'கபாலி' இயக்குனர் சிங்கப்பூர் செல்வது ஏன்? புதிய தகவல்

Friday, June 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனவர் இயக்குனர் பா.ரஞ்சித். தற்போது 'கபாலி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் இறுதிக்கட்டத்தில் இருக்கும் ரஞ்சித் நாளை மறுநாள் அதாவது ஜூன் 18ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
நடிகர் சங்கத்தலைவர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பறந்து செல்ல வா` என்ற படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூன் 18ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் 'கபாலி' இயக்குனர் ரஞ்சித் மற்றும் நீயா நானா' புகழ் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சிங்கப்பூரில்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.