close
Choose your channels

'பாகுபலி', '2.0' படங்களைவிட பெரிய பட்ஜெட்டில் எனது படம் : சுந்தர் சி

Thursday, June 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த பிரபல இயக்குனர் ராம.நாராயணன் உருவாக்கிய ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் நமது Indiaglitz இணையதளத்திற்கு பிரத்யேகமாக சுந்தர் சி கொடுத்த பேட்டியில் இந்த படம் குறித்து சில தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். அதில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தான் இயக்கவுள்ள படத்தின் பட்ஜெட் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' மற்றும் 'ரஜினியின் '2.0' படத்தின் பட்ஜெட்டுக்களைவிட பெரியது என்றும் இந்த படம் தனது நீண்ட நாள் கனவுப்படம் என்றும் கூறியுள்ளார்.
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய கதைக்கு தான் எட்டு மாதங்களாக திரைக்கதை அமைத்ததாகவும் நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
சாபுசிரில் கலை இயக்கத்தில் ஆர்.சி. கமலக்கண்ணன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஹீரோ ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுந்தர் சி- ஸ்ரீதேனாண்டாள் இணையும் இந்த படத்தில் சூர்யா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.