close
Choose your channels

அஜித், பவன்கல்யாணுக்கு கிடைத்த புதிய சகோதரர்

Monday, February 15, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்தியாவின் இரண்டு பெரிய நடிகர்களான அஜித் மற்றும் பவன்கல்யாண் ஆகியோர்களின் படங்களுக்கு சமீபத்தில் வில்லனாக நடித்தவர் கபீர்சிங். அஜித் நடித்த வேதாளம்' திரைப்படத்திலும், பவன்கல்யாண் நடித்து முடித்துள்ள 'சர்தார் கப்பார்சிங்' படத்திலும் வில்லனாக நடித்துள்ள கபீர்சிங், இருவருடனும் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார்.


அஜித்தும், பவன்கல்யாணும் தென்னிந்தியாவின் பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் என்னிடம் மூத்த சகோதரர்கள் போல பழகினார்கள். 'வேதாளம்' படப்பிடிப்பின் இறுதியில் படக்குழுவினர் சுமார் 200 பேர்களுக்கும் அஜித் உணவு சமைத்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல் பவன்கல்யாண் என்னிடம் அடிக்கடி உங்களுக்கு எல்லாம் சரியாக இருக்கின்றதா? என அன்புடன் விசாரிப்பார். இருவருமே என்னிடம் சக நடிகர் போல் பார்க்காமல் குடும்பத்தில் ஒருவர் போல் இருந்து கவனித்து கொண்டனர்.

கடவுளின் அருளால் தற்போது நான் பிசியாக இருக்கின்றேன். வேதாளம்' வெற்றிக்கு பின்னர் எனக்கு பல தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் வரும் ஏப்ரல் வரை நான் பிசியாக இருப்பதால் என்னால் புதிய தமிழ்ப்படங்களில் கமிட் ஆக முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.