close
Choose your channels

இந்த வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? கமல்ஹாசன் கேள்வி கேட்பது யாரை?

Thursday, August 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பதும் அவரது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்ற தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் மூலம் அரசியல் பேசி வருவார் என்பதும் அவரது ஆக்கபூர்வமான அரசியல் கருத்து பலரையும் சிந்திக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று திடீரென காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி உள்பட சுமார் 5 ஆயிரம் பேர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இந்த வீரதீரப் பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்? என மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அந்த விமர்சனத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?’ என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.