close
Choose your channels

பணப்பெட்டி கிளம்பி போனாலும் வீட்டில் பகை கொட்டி கிடக்கு, அது ஏன்? கமல்ஹாசன்..!

Saturday, January 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய இருக்கும் நிலையில் கடைசி கட்டத்தில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். நாளை 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இறுதி போட்டிக்கு செல்லும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிய பார்வையாளர்களும் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன் பேசிய போது ’பணப்பெட்டி புறப்பட்டு விட்டது, வீட்டில் இருக்கிற எல்லாருமே நான் பெட்டி எடுத்துட்டு போயிட்டா, கப்பெல்லாம் செஞ்சு வச்சிருக்காங்க, 50 லட்சம் இருக்கு, அதை யார் வாங்குவாங்க, அப்படிங்கிற கவலையில இருக்காங்க. ஆனால் வெற்றியாளர் ஒருவர்தான் என்பதை பற்றி அவர்களுடைய சிந்தனை என்ன?

பணப்பெட்டி கிளம்பி போனாலும் வீட்டிலேயே தங்கியது அந்த பகை கொட்டி கிடக்கு, அது ஏன்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்புவதுடன் இன்றைய முதல் ப்ரோமோ முடிவுக்கு வந்துள்ளது. கமல்ஹாசன் கூறியது போல் கடைசி நேரத்தில் கூட போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவு போட்டு வருகின்றனர். இன்னும் ஒரே வாரம் இருக்கையில் போட்டியாளர்கள் ஒற்றுமையுடன் விளையாடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.