close
Choose your channels

தரமில்லாமல் விளையாடுகிறார்கள்.. விசாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: கமல்ஹாசன்

Saturday, December 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தரம் இல்லாமல் விளையாடுகிறார்கள் என்றும் அவர்களை விசாரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியபோது ’ஊரே வெள்ளத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கும் விஷயம் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்கள் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள்.

வெளியே தண்ணீர் வடிந்ததும் தரை தெரியும். ஆனால் இவர்கள் மூழ்கி இருக்கும் விளையாட்டு முடிந்தால் தரம் தெரியும். தரம் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே விசாரணை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து இந்த வார பிரச்சனைகளை சரமாரியாக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.