close
Choose your channels

'காஞ்சனா 3' நடிகைக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு!

Saturday, March 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அரசின் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் அப்பாவி பொது மக்களை மட்டுமின்றி ஆட்சியில் இருப்பவர்களையும் திரையுலக பிரபலங்கள் சிலரையும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிரோம். சமீபத்தில் கூட நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகைகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

‘காஞ்சனா 3’ திரைப்படத்தில் வேதிகா, ஓவியா மற்றும் நிக்கி தம்போலி ஆகிய மூவரும் நாயகிகளாக நடித்து இருந்த நிலையில் அவர்களில் நிக்கி தம்போலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில், ‘எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது என்பது இன்று காலை தெரியவந்தது. இதனை அடுத்து நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எனது நன்றி என்று கூறியுள்ளார்.

மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள் என்றும் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.