close
Choose your channels

100 கோடி பட்ஜெட், ஒரு வருடம் ஆராய்ச்சி.. சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தின் முக்கிய தகவல்..!

Saturday, November 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றும் இந்த படத்தின் கதையை படக்குழுவினர் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆராய்ச்சி செய்து எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’காந்தாரா’. இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது என்பதும், வெறும் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மொழிகளில் வெளியாகி 450 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் 27ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’காந்தாரா’ முதல் பாகத்தின் கதைக்கு முந்தைய கதையம்சம் கொண்ட இந்த படம் கிபி 300 முதல் 400 வரையிலான காலகட்டத்தில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் கதைக்காக ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது குழுவினர் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆய்வு செய்து கதையை தயார் செய்திருப்பதாகவும் தெரிகிறது.

பான் - இந்திய திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி என்றும் கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் என திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.