close
Choose your channels

முதல்முறையாக தென்னிந்திய திரையுலகிற்கு வரும் கரீனா கபூர்.. யார் ஹீரோ தெரியுமா?

Monday, March 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கரீனா கபூர் முதல் முறையாக தென் இந்திய திரைப்படத்தில் அதுவும் மாஸ் நடிகரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கரீனா கபூர், கடந்த 2012 ஆம் ஆண்டு சையத் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் சினிமா. விளம்பரம் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் முதல் முறையாக கன்னட நடிகர் யாஷ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கரீனா கபூர் ஒப்புக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரே பேசிய போது ’முதல் முறையாக தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் அடிக்கிறேன், பான் இந்திய திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது எங்கு நடக்கிறது என்று எனக்கு தெரியாவிட்டாலும் இந்த தகவலை நான் ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ’டாக்ஸிக்’ என்ற திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் தான் கரீனா கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் ரசிகர்கள் போலவே தென்னிந்திய ரசிகர்களும் அவரை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.