close
Choose your channels

தமிழக தேர்தலும், சிவகார்த்திகேயன், கார்த்தி தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவுகளும்!

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ உள்பட ஒருசில திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து நேற்று ‘டாக்டர்’ படத்தின் தயாரிப்பாளர் மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்த ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் மேலும் சில படங்கள் சட்டமன்ற தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கார்த்தி நடித்த ’சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி அதே தேதியில் இந்த படம் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்

ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நாள் என்பதால் அன்றைய தினம் திரையரங்குகள் இரண்டு காட்சிகள் மட்டும் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஏப்ரல் 2ஆம் தேதியை விட்டால் சரியான ரிலீஸ் தேதி தங்களுக்கு கிடைக்காது என்பதால் அதே தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இடம்பெற்ற சிம்பு பாடிய ‘யாரையும் இவ்வளவு அழகா’ என்று பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.