close
Choose your channels

கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Thursday, February 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் கார்த்திக் நரேன் தற்போது அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் உள்பட பலர் நடித்த 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கௌதம் மேனன் தயாரித்துள்ள இந்த படம் மிகவிரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நைட் நாஸ்டால்ஜியா ஃபிலிமோடெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம் (கார்த்திக் நரேனின் 3வது படம் குறித்த அறிவிப்பு)

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள 3வது படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'நாடக மேடை' என்ற டைட்டிலை இளம் இயக்குனர் தேர்வு செய்துள்ளார். இந்த படம் இளைஞர்களின் பார்வையில் தற்போதைய நவநாகரீக சமுதாயம் எப்படி உள்ளது என்பதை குறிக்கும் வகையான கதையம்சம் கொண்டது என்றும், இன்னும் ஒருசில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.