close
Choose your channels

அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்த விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து கூறிய இயக்குனர்

Saturday, November 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அசோக்குமார் மரணத்திற்கு காரணமானதாக கூறப்படும் அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் அன்புச்செழியன் நல்லவர், வல்லவர், உத்தமர் என்ற சான்றிதழ் கொடுத்து கொண்டிருப்பவர்களும் திரையுலகினர்களே என்பது வேடிக்கையாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. கந்துவட்டி கொடுமையினால் ஒரு உயிரே பறிபோயிருக்கின்ற நிலையிலும் கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக ஒருசிலர் பேசி வருவது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. இதுவரை விஜய் ஆண்டனி, சீனுராமசாமி, தேவயானி, சுந்தர் சி உள்பட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இந்த நிலையில் அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசிய விஜய் ஆண்டனிக்கு இயக்குனர் கருபழனியப்பன் தனது ஸ்டைலில் வாழ்த்து கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'விஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்! விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.