close
Choose your channels

'SK 21' படப்பிடிப்பை திடீரென நிறுத்திய அதிகாரிகள்: ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய படக்குழு..!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’SK 21' இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் காஷ்மீர் சென்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் உள்ள அதிகாரிகள் படப்பிடிப்பை நிறுத்திய நிலையில் படக்குழுவினர் அனைவரும் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் ஜி20 மாநாடு நடக்க இருப்பதை அடுத்து காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் அது சம்பந்தமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இதனை அடுத்து படப்பிடிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ’SK 21' படத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.