close
Choose your channels

மீனவ பெண்களுடன் ஒரு வாரம் தங்குகிறார் கீர்த்தி சுரேஷ்.. இதுதான் காரணம்..!

Wednesday, August 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தமான நிலையில் இந்த படத்திற்காக அவரை இயக்குனர், மீனவ பெண்களுடன் ஒரு வாரம் பழகும் வகையில் அவர்களுடன் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

’கார்த்திகேயா 2’ படத்தின் இயக்குனர் சந்து மொன்டேட்டி இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் நாகசைதன்யா நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் மீனவர்கள் வாழ்க்கை பின்னணியை கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இதற்காக இயக்குனர் மற்றும் படக்குழுவினர் மீனவர்கள் வாழும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து திரைக்கதை அமைத்து வருகின்றனர்

இந்த படத்தில் நாயகிக்கு மிக அழுத்தமான கேரக்டர் இருப்பதால் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை அடுத்து அவர் மீனவ பெண்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை ஒரு வாரம் மீனவ பெண்களுடன் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் தனது கேரக்டர் மிக இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் கூறியதை ஒப்புக்கொண்டு மீனவ பெண்களுடன் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.