close
Choose your channels

33 வருடங்கள் போனதே தெரியவில்லை.. அது ஒரு மேஜிக்.. பிரபு குறித்து குஷ்புவின் பதிவு..!

Friday, April 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளைய திலகம் பிரபுவுடன் குஷ்பு நடித்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 33 ஆண்டுகள் ஆனதை அடுத்து இது குறித்த தனது மலரும் நினைவுகளை நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரபு, குஷ்பு நடிப்பில் இளையராஜா இசையில் பி. வாசு இயக்கத்தில் உருவான ’சின்னதம்பி’ திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்றுடன் இந்த படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதை அடுத்து குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் ’33 ஆண்டுகள் போனதே தெரியவில்லை, தமிழக மக்கள் ’சின்னத்தம்பி’ படத்தை 33 ஆண்டுகள் ஆகியும் மறக்கவில்லை. எங்கள் வாழ்க்கையை அப்படியே மாற்றிய படம் தான் சின்னத்தம்பி. இந்த படத்தால் எங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பு பாசம் கிடைத்தது. இன்று வரை ஒரு நம்ப முடியாத வெற்றியாக இந்த படம் உள்ளது, இந்த படத்தின் வெற்றிக்காக ஒவ்வொருவர் மீதும் நன்றியுடன் இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் எனது அன்பான இயக்குனர் பி வாசு, அபிமானத்திற்குரிய சக நடிகர் பிரபு, எப்போதும் எனக்கு ஸ்பெஷல் ஆனவர்கள். இந்த படத்தில் இளையராஜாவின் மேஜிக் இசை எல்லா காலத்திற்கும் நம்மை வேட்டையாட வைக்கும், சின்னத்தம்பி 33 வருடங்கள் நிறைவடைந்துள்ளது ,உங்கள் அன்புக்கு நன்றி’ என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.