close
Choose your channels

1983ல் இருந்தே பாலியல் தொல்லை உள்ளது: பழம்பெரும் நடிகை அதிர்ச்சி பேட்டி

Wednesday, July 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில மாதங்களாக பரபரப்புடன் புகார் கூறி வரும் நிலையில் பல நடிகைகள் ஸ்ரீரெட்டி கூறுவதில் உண்மை இல்லை என்றும், சினிமாவில் நடிகைகள் மதிப்புடன் நடத்தப்படுவதாக பேட்டி அளித்தனர். இந்த நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபல நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் நடிகை குட்டி பத்மினி, கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவுலகில் பாலியல் பிரச்சனை இருப்பதாகவும், இல்லை என்று யாரும் கூறமுடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் பலர் திறமையின் அடிப்படையில் சினிமாவுக்கு வருவதில்லை என்றும் சினிமாவில் நுழைந்தவுடனே த்ரிஷா, நயன்தாரா ஆக வேண்டும், பகட்டான வாழ்க்கை வாழ வேண்டும் என்று சினிமாவுக்கு வருவதாகவும், அவர்களது ஆசை நனவாகாத போது ஏமாற்றம் அடைந்து சிலர் தற்கொலையும் ஒருசிலர் ஸ்ரீரெட்டி போன்று பேட்டி அளித்தும் வருவதாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

ஸ்ரீரெட்டி சொல்லும் லிஸ்ட்டை கேட்கும்போது வருத்தமாக உள்ளது. இவ்வளவு பேர் அவரை பயன்படுத்தியும் ஒருவர் கூட அவருக்கு வாய்ப்பு தரவில்லை என்பது ஒரு சோகமே. இருப்பினும் ஸ்ரீரெட்டி செய்தது முழுக்க முழுக்க தவறு. படுக்கையை பகிர்ந்து கொள்வதன் மூலமே வாய்ப்பை பெறலாம் என்ற அவருடைய நோக்கம் தவறு. அவரை யாரும் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவருடைய சம்மதத்துடன் தான் அனைத்தும் நடந்துள்ளது. எனது திறமையை மதித்து வாய்ப்பு கொடுத்தால் கொடுங்கள், இல்லையென்றால் சினிமாவே தேவையில்லை என்று அவர் உறுதியாக இருந்திருக்க வேண்டும். நாம் தவறு செய்தாலும் பரவாயில்லை, வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பதே ஒரு தவறுதான். சினிமா மட்டுமின்றி எல்லா துறையிலும் தவறு நடக்கத்தான் செய்கிறது. இல்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால் அதே நேரத்தில் நாம் இடம் தராமல் தப்பு நடக்க வாய்ப்பே இல்லை.

இவ்வாறு குட்டி பத்மினி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.