close
Choose your channels

அசோக்செல்வன் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குனர்.. 'ஜெயிலர்' நடிகரும் இணைகிறாரா?

Thursday, February 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை பெண் இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘சூது கவ்வும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான அசோக் செல்வன் அதன் பிறகு ’தெகிடி’ ’ஆரஞ்சு மிட்டாய்’ ’கூட்டத்தில் ஒருவன்’ ’சில சமயங்களில்’ உள்பட பல படங்களில் நடித்தார்

’ஓ மை கடவுளே’ என்ற வெற்றி படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு அவருக்கு அடுத்தடுத்து வெற்றி படங்கள் கிடைத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான ’போர் தொழில்’ ’சபாநாயகன்’ மற்றும் இந்த ஆண்டு வெளியான ’ப்ளூ ஸ்டார்’ ஆகிய படங்கள் அசோக் செல்வனுக்கு வெற்றி படங்களாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் பிரியா இயக்க இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ’கண்ட நாள் முதல்’ உள்பட சில படங்களை இயக்கிய நிலையில், அசோக் செல்வன் அடுத்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

‘பொன் ஒன்று கண்டேன்’ என்று இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ’ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மகனாக நடித்த வசந்த் ரவி நடிக்க இருப்பதாகவும் இது ஒரு முக்கோண காதல் கதை என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாக தெரிகிறது. இந்த படம் குறித்த கூடுதல் விவரங்கள் மிக விரைவில் படக்குழுவினரால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.