close
Choose your channels

'மாறன்' திரைப்படத்தில் இருந்து விலகியது ஏன்? விளக்கம் அளித்த பிரபலம்!

Friday, March 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'மாறன்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த டிரைலரில் இடம் பெற்றிருந்த வசனங்கள் சூப்பராக இருந்ததாகவும் வசனகர்த்தாவான விவேக் அவர்களுக்கு நன்றி என்றும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் இது குறித்து விளக்கமளித்துள்ளார். 'மாறன்’ திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுத தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த படத்தில் இருந்து தான் விலகி விட்டதாகவும் எனவே இந்த படத்தில் உண்மையாக வசனம் எழுதியவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

மேலும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக தான் நான் 'மாறன்’ படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் இருந்து விலகினேன் என்றும், எனது முடிவை மதித்த 'மாறன்’ குழுவினருக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 'மாறன்’ படத்தை பார்த்தபோது அந்த படத்தின் வசனங்கள் அருமையாக இருந்ததை உணர்ந்தேன் என்றும் விவேக் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நான் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி வந்தாலும் 'மாறன்’ தான் ஒரு தொடக்கப்புள்ளி என்பதை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.