close
Choose your channels

துல்கர் சல்மானுக்கு பதில் யார்.. 'தக்லைஃப்' படத்திற்காக மாஸ் நடிகரை தேர்வு செய்த மணிரத்னம்..!

Tuesday, March 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் விலகியதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து சில காரணங்களால் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி கேரக்டரில் நடிப்பதற்கு இயக்குனர் மணிரத்னம் மாஸ் நடிகர்களை தேர்வு செய்வதற்காக பேச்சுவார்த்தையில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி துல்கர் சல்மான் நடிக்க இருந்த கலெக்டர் கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை அவரிடம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு நடிக்க உள்ளார்.

ஏற்கனவே சிம்பு, கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ’எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க இருந்தாலும், கமல்ஹாசன் உடன் ஒரே படத்தில் சிம்புவும் நடிக்க உள்ளார் என்பது இரு தரப்பு ரசிகர்களுக்கும் குஷியான ஒரு தகவல் ஆகும். அதேபோல் ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் சிம்பு நடித்திருந்த நிலையில் தற்போது அவருடன் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரிலும் ஒரு மாஸ் நடிகரை தான் மணிரத்னம் தேர்வு செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் மணிரத்னத்தின் நட்சத்திர தேர்வு என்பது இந்த படத்தின் ஹைலைட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.