close
Choose your channels

வைரமுத்து கருத்தை வைத்து மதக்கலவரமா? மன்சூர் அலிகான் ஆவேசம்

Saturday, January 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த கருத்துக்கு ஆதரவாக பாரதிராஜா உள்பட ஒருசிலரும், எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் உள்பட ஒருசிலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது: வைரமுத்து ஒரு சிறந்த படைப்பாளி. மதக்கலவரங்களை உருவாக்கவே சிலர் தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்' என்று கூறினார்.

மேலும் வைரமுத்து அவர்கள் அமெரிக்காவில் உள்ள ஆசிரியர் ஒருவர் எழுதியதைத்தான் அவர் கூறியுள்ளார். அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். இதை வைத்து உள்நோக்கத்துடன் மதக்கலவரத்தை உண்டாக்க வேண்டாம். மதம் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டதுதான்' என்று கூறியுளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.