close
Choose your channels

லாக்டவுன் எதிரொலி: இ.எம்.ஐ கட்ட முடியாமல் தவிக்கும் பிரபல நடிகைகள்

Tuesday, May 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்ற காரணத்தால் பல திரையுலக பிரபலங்கள் தவணை முறையில் ஆடம்பர வீடுகள், ஆடம்பர கார்கள் வாங்கியுள்ளனர் என்பதும், அவர்களுடைய வருமானத்திற்கு அந்த தவணைத் தொகை என்பது ஒரு சிறிய தொகைதான் என்பதால் இதுகுறித்து அவர்கள் எப்போதும் கவலைப்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அவர்களுடைய எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. பிரபல நடிகர் நடிகைகள் பலர் ஆடம்பர பங்களாக்களையும் கார்களையும் வாங்கிவிட்டு அதற்குரிய இ.எம்.ஐ தொகையை கட்ட முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐதராபாத் ஐடி பார்க்கில் ஆடம்பர அபார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியதாகவும் அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு மாதம்தோறும் கட்ட வேண்டிய தவணையை கட்டுவதற்கு தற்போது திணறி வருவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் தமிழ் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல நடிகர், நடிகைகளும் தவணை முறையில் வாங்கிய வீடுகளுக்கு கட்ட வேண்டிய தவணைத் தொகையை கட்ட முடியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பல நடிகைகள் தங்களிடம் வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் கூட தரமுடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஒருசில நடிகைகள் முன்னணி தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸாக பணம் கேட்டு இருப்பதாகவும் அதனை வைத்து இ.எம்.ஐ பிரச்சனையை சமாளித்துவிடலாம் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு ஏற்கனவே பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்த நிலையில் தற்போது சேமிப்பின் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.