close
Choose your channels

விஜய் கையில் 'கத்தி': அமைச்சர் ஜெயகுமார் கண்டனம்

Tuesday, September 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் கடந்த சில ஆண்டுகளாக ரிலீசுக்கு முன்னரோ அல்லது ரிலீசுக்கு பின்னரோ பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த பிரச்சனைகள் படத்திற்கு இலவச புரமோஷன்களாக இருந்தாலும் இதனால் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் டென்ஷனும் எகிறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பின் இந்த படத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் முளைத்துள்ளது. விஜய்யின் பேச்சை அதிமுக மற்றும் பாஜகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். திடீரென இரண்டு மாதங்கள் கழித்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு எதிராக ஒரு கூட்டம் போராட்டம் நடத்தி வருகின்றது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டது என தனியார் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ’பிகில்’ திரைப்படத்தின் போஸ்டர்களில் விஜய் கத்தியோடு இருப்பதை பார்த்தேன். இந்த போஸ்டரை பார்த்து அவரது ரசிகர்களும் கத்தியை தூக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று கூறினார். மேலும் ’சினிமா மூலம் எம்ஜிஆர் போல நல்ல கருத்துகளை விஜய் பரப்ப வேண்டும்’ என்று கூறினார். இதற்கு விஜய் ரசிகர்கள், ‘எம்ஜிஆர் கத்தியோடு பல படங்களில் நடித்த போஸ்டர்களை வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.