close
Choose your channels

'தர்பார்' பட நஷ்டம் குறித்து தமிழக அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாகவும் வசூலை வாரி குவித்ததாகவும் கூறப்பட்டது

ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக ஒரு சில விநியோகிஸ்தர்கள் ரஜினி வீட்டு முன் கூடி தங்களுக்குள் ’தர்பார்’ படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் இது குறித்து ரஜினியிடம் தாங்கள் முறையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் ஒரு சில விநியோகிஸ்தர்கள் ரஜினி வீட்டின் முன் இருந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் ’தர்பார்’ பட நஷ்டம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறியபோது, ’தர்பார்’ திரைப்படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவும் என்று கூறியுள்ளார்

நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அதற்கு தகுந்த ஆதாரம் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆதாரங்களை விநியோகஸ்தர்கள் கொண்டு செல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.