close
Choose your channels

எனக்கும் 'அரியவன்' படத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது: மித்ரன் ஜவஹர்

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ ’குட்டி’ ’திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர்இயக்கத்தில் ’அரியவன்’ என்ற திரைப்படம் உருவாகி இருப்பதாகவும் இந்த படம் மார்ச் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென இயக்குனர் மித்ரன் ஜவஹர், ‘அரியவன்’ திரைப்படத்தை நான் இயக்கவில்லை என்றும் அந்த படத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈஷான் நாயகனாகவும், ப்ராணலி நாயகியாகவும் அறிமுகமாகியுள்ள 'அரியவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆர்ச் 3ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தை மித்ரன் ஜவஹர்தான் இயக்கியது என்று விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். ‘அரியவன்’ திரைப்படத்தை எனது உதவியாளர் ஒருவர்தான் இயக்கினார், டிஷ்கசன், படப்பிடிப்பு தளத்தில் ஒரு சில உதவிகள் மட்டுமே நான் செய்தேன், அதை தவிர 'அரியவன்’ படத்துக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 'அரியவன்’ திரைப்பட விளம்பரத்தில் எனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக இதை தெரிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மாதவன் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுத உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.