close
Choose your channels

அவசர சட்டம் இல்லை. கைவிரித்தார் மோடி

Thursday, January 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் உடனடியாக மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்று மோடி முதல்வரிடம் தெரிவித்துள்ளதாகவும், இருப்பினும் தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
முதல்வர் - பிரதமர் சந்திப்பில் ஜல்லிக்கட்டு குறித்து நல்ல முடிவு கிடைக்கும் என்று போராட்டக்காரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த நிலையில் வழக்கை காரணம் காட்டி பிரதமர் மோடி அவசர சட்டம் இயற்ற மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக மக்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமரின் இந்த முடிவால் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டம் மேலும் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.