close
Choose your channels

ரஜினி-அஜித்துடன் போட்டி போட தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்

Tuesday, January 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்துடன் ஆர்.ஜே.பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடித்த 'எல்.கே.ஜி' படத்தையும் வெளியிட திட்டம் இருந்ததாகவும், ஆனால் அதனை தான் தடுத்துவிட்டதாகவும் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: "ரஜினிகாந்திற்கென மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. அவர்கள் பேட்ட படத்தினை வெற்றி பெற வைக்க முயற்சிப்பார்கள். அதுமட்டுமின்றி பேட்ட படத்தில் விஜய்சேதுபதி இருக்கிறார். அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் வளர்ந்து வருகின்றனர். இளம்தலைமுறையினை விஜய்சேதுபதி தன்வசப்படுத்தியிருக்கிறார். மேலும் சுப்ரமணியபுரம் சசிக்குமார் நடிக்கிறார். அவருக்கும் தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதனால் பேட்ட பொங்கலுக்கு வேட்டையாடும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமின்றி பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாகவுள்ளது. நடிகர் அஜித்தை விஸ்வாசத்துடன் நேசிக்கும் தம்பிகள் தமிழகத்தில் மிக அதிகம். அதுமட்டுமல்ல அஜித் அவர்களுக்காக தலை கொடுக்கவும் தயாராகவுள்ள தம்பிகளை நான் பார்த்திருக்கிறேன். அதனால் விஸ்வாசமும் வெற்றிச் சமவெளிக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

ஆர்.ஜே.பாலாஜியும் நானும் நடித்த எல்.கே.ஜி படத்தை பொங்கலுக்கு கொண்டு வரலாம் என்ற திட்டம் இருந்தது. நான்தான் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களின் படம் வெளியாகவுள்ள நிலையில், அதோடு போட்டி போட நமக்குத் தகுதியில்லை. ஆகவே அந்த படங்கள் வெளியான பின்பு நமது படத்தை வெளியிடுவோம் என்னும் ஆலோசனையை ஆர்.ஜே.பாலாஜியிடம் கூறினேன். அப்படித்தான் வெளியிடுவார்கள் என நம்புகிறேன்' இவ்வாறு நாஞ்சில் சம்பத் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.