close
Choose your channels

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. மன்சூர் அலிகான் மீது அதிரடி நடவடிக்கை..!

Monday, November 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், உட்பட பல நடிகைகளும் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், குஷ்பு உட்பட பல அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருப்பதால் தனக்கு மேல் உள்ள நிர்வாகிகளிடம் கூறி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஐசிசி 509பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை பயன்படுத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இது போன்ற கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.