close
Choose your channels

ஒரே நாளில் 'பவளக்கொடி'யை முடித்த நயன்தாரா

Friday, December 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடித்த 'டோரா' என்ற திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, 'பவளக்கொடி' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் தனது பவளக்கொடி கேரக்டருக்கான டப்பிங்கை நயன்தாரா சமீபத்தில் சொந்தக்குரலில் பதிவு செய்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் முழு டப்பிங்கையும் ஒரே நாளில் அவர் முடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

நயன்தாரா, தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார். விவேக்-மெர்லின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.