close
Choose your channels

'மேதகு' இயக்குனருக்கு இது தேவையா? நயன்தாரா ரசிகர்கள் காட்டம்!

Wednesday, June 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படமான ’மேதகு’ என்ற திரைப்படத்தை இயக்குனர் கிட்டு, தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை மிக அழகாக ’மேதகு’ என்ற திரைப்படமாக இயக்குனர் கிட்டு இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் தமிழ் திரையுலகம் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் கிட்டு தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியுள்ளார். இது நயன்தாராவுக்கு ரசிகர்களை ஆத்திரமூட்டியது. ’மேதகு’ இயக்குனருக்கு இதெல்லாம் தேவையா? என்று நயன்தாரா ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இயக்குனர் கிட்டு தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவின் காதல் குறித்து குறிப்பிடுகையில், எது இன்று உன்னுடையதோ.. அது நாளை மற்றொருவருடையதாகிறது.. மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்’ என்று பதிவு செய்துள்ளார். நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நிலையில் அவரது முந்தைய காதலை குறிக்கும் விதமாகத்தான் அவர் இவ்வாறு கூறியுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு இயக்குனர் கிட்டுவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு காதல் தோல்வியில் முடிந்துவிட்டால் இன்னொரு காதல் வராதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.